காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராகவும் மற்றும் சமீப வருடங்களாக தென்னிந்திய அளவில் மிகப்பெரிய நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் கிச்சா சுதீப். தற்போது அவர் நடித்துள்ள விக்ராந்த் ரோனா என்கிற திரைப்படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்த நிலையில் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளார் சுதீப். இதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது
சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாடிய சுதீப், பிறந்தநாள் சிறப்பு தரிசனமாக, சாமுண்டீஸ்வரி கோவில் சென்று வழிபட்டுள்ளார் அவருடன் அவரது குடும்பத்தாரும் மிக நெருங்கிய நண்பர்கள் சிலரும் சென்றிருந்தனர். சுதீப்பின் எதிர்பாராத திடீர் வருகையால் கோவிலில் ரசிகர்கள் கூடிவிட அவர்களை கலைத்து, சுதீப்பை பாதுகாப்பாக அனுப்பி வைப்பதற்குள் போலீசார் ரொம்பவே திணறித்தான் போனார்கள்.




