ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
கேரளா அருகே அரபிக் கடலில் இருக்கிறது லட்சத் தீவுகள். இங்கு பல ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவு மக்கள் மீது மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மலையாள நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா "மத்திய அரசு, லட்சத் தீவு மக்கள் மீது பயோ வார் நடத்துவதாகவும், கொரோனாவை பரப்புவதாகவும்" குற்றம் சாட்டினார். இதனால் இவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயிஷாவுக்கு கேரள உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆயிஷா சுல்தானா, ‛‛லட்சதீவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், நான் தெரிவித்த கருத்தை தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வைத்தும் ஒரு சினிமா இயக்கப் போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.