பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் | பிளாஷ்பேக் : கலோக்கியல் தலைப்பின் தொடக்கம் | தெலுங்கு கம்யூனிஸ்ட் தலைவராக நடிக்கும் கன்னட ராஜ்குமார் | யானை தந்த வழக்கு: மோகன்லாலின் உரிமம் ரத்து |

மலையாள முன்னணி நடிகரான பிரித்விராஜ், சேனல் ஒன்றின் நிருபராக பணியாற்றிய சுப்ரியா மேனன் என்பவரை சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். கடந்த 2014ல் இவர்களுக்கு அலங்ரிதா என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது. தற்போது ஏழு வயதாகும் இந்த குழந்தை, தனது தந்தை ஒரு நடிகர் மட்டுமல்ல இயக்குனர் என்பதையும் கூட நன்றாக புரிந்து வைத்திருக்கிறதாம்.
அந்த வகையில் சமீபத்தில் தனது குழந்தை எழுதிய பத்து வரி சிறுகதை ஒன்றை தனது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள பிரித்விராஜ், சமீபத்தில் தான் கேட்ட கதைகளிலேயே, மிகச்சிறந்த கதை இதுதான் என்றும், இந்த படத்தை திரைப்படமாக இயக்க விரும்புகிறேன் என்றும் கூறியுள்ளார். அப்படி அந்த குழந்தை எழுதியுள்ள கதை இதுதான்.
அமெரிக்காவில் ஒரு அப்பாவும் மகனும் வசிக்கின்றனர். இரண்டாம் உலகப்போர் அங்கு நடந்தபோது, அவர்கள் அங்கிருந்து அகதிகள் முகாமிற்கு இடம் பெயர்கின்றனர். இரண்டு வருடங்கள் அங்கேயே வசிக்கின்றனர். போர் முடிந்தபிறகு, அவர்கள் மீண்டும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி, சந்தோசமாக வாழ ஆரம்பிக்கின்றனர் என்று, அந்த குழந்தை தனக்கு தோன்றிய ஒரு சிறுகதையை எழுதியுள்ளது. ஏற்கனவே லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறிய பிரித்விராஜ், தனது மகள் சொன்ன கதையிலும் சினிமாவுக்கான அம்சங்கள் உள்ளன என்று கூறியுள்ளதுடன், இந்த கொரோனா தாக்கம் முடிவடைந்த பின்பு இந்த கதையை படமாக்கும் முயற்சியில் இறங்குவேன் என்றும் கூறியுள்ளார்




