நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்புவரை, மலையாளம் தவிர வேறு எந்த மொழியிலும் நடிப்பதற்கு, தனக்கு சரிப்படாது என்று கூறிவந்த நடிகர் பஹத் பாசில், தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்த வகையில் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா என்கிற படத்தில் வில்லனாக, போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் காட்சிகள் பாதிக்குமேல் படமாக்கப்பட்டு விட்டன.
இந்த நிலையில் மலையாளத்தில் அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு நடித்த அதிரன் என்கிற படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு, அனுகோனி அதிதி என்கிற பெயரில் தெலுங்கில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பஹத் பாசிலுக்காக தெலுங்கில் டப்பிங் பேசி இருப்பவர் தருண் என்கிற டப்பிங் கலைஞர். இவரது குரல் பகத் பாசிலுக்கு கச்சிதமாக பொருந்தி உள்ளதாம்.
இதை கேள்விப்பட்ட புஷ்பா படக்குழுவினர் இந்த படத்தின் டப்பிங்கை பார்த்துவிட்டு, தங்களது படத்திலும் பஹத் பாசிலுக்கு தருணே டப்பிங் பேச வேண்டுமென கூறிவிட்டார்களாம். இனி பஹத் பாசில் நடிக்கும் தெலுங்கு படங்களுக்கு, தருண் தான் தொடர்ந்து குரல் கொடுப்பார் என எதிர்பார்க்கலாம்