பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லிகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் மூலம் ஏதாவது ஒரு முக்கிய விசயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒவ்வொருவருடைய சோஷியல் மீடியா கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில், பிடிக்காதவர்களை ட்ரோல் செய்வதும் அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு ஆயிரம் லைக்குகள் தான் வந்திருந்தன ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக 10,000 பேர் அந்த புகைப்படத்தை டிஸ்லைக் செய்திருந்தனர். யார் இவர்கள்? என்ன மாதிரி மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் பக்கத்தில் நிற்பதற்கே தகுதியில்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் என்ன வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?” என்று கேட்டுள்ளார் பூரி ஜெகன்நாத்.
இது போன்றவர்களின் சோஷியல் மீடியா கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும்போது தான், அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்கிற விவரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.