கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் | சைபர் கிரைமில் சின்மயி புகார் | பிரித்விராஜின் விலாயத் புத்தா ரிலீஸ் தேதி அறிவிப்பு | விஜய் நடிக்க மறுத்து, பின்னர் அவரை வருத்தப்பட வைத்த 'ஆட்டோகிராப்' | மீண்டும் காற்று வாங்கும் சிங்கிள் தியேட்டர்கள் : நிலைமை மாறுமா ? | காப்பி போஸ்டர் சர்ச்சையில் சிக்கிய 'ஜனநாயகன்' | ஒரு பக்கம் மராத்தி பாடல், மறுபக்கம் ஆங்கிலப் படம்… இசையால் பேசவைக்கும் இளையராஜா | சினேகா திருமணத்தை நடத்தி வைத்தேன் : இயக்குனர் சேரன் |

போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் தெலுங்கு சினிமாவின் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத். தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் லிகர் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சினிமா மட்டுமின்றி அவ்வப்போது சோஷியல் மீடியாவில் வீடியோக்கள் மூலம் ஏதாவது ஒரு முக்கிய விசயத்தை பற்றி விவாதிப்பது இவரது வழக்கம். அந்த வகையில் தற்போது ஒவ்வொருவருடைய சோஷியல் மீடியா கணக்கையும், அவர்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்துள்ளார்
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நாளுக்கு நாள் சோஷியல் மீடியாவில், பிடிக்காதவர்களை ட்ரோல் செய்வதும் அவதூறு பரப்புவதும் அதிகரித்து வருகிறது சமீபத்தில் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்ட அன்னை தெரசாவின் புகைப்படத்திற்கு ஆயிரம் லைக்குகள் தான் வந்திருந்தன ஆனால் அதிர்ச்சி தரும் விதமாக 10,000 பேர் அந்த புகைப்படத்தை டிஸ்லைக் செய்திருந்தனர். யார் இவர்கள்? என்ன மாதிரி மனநிலை கொண்டவர்கள்? அன்னை தெரசாவின் பக்கத்தில் நிற்பதற்கே தகுதியில்லாத இவர்கள், டிஸ்லைக் செய்வதன் மூலம் என்ன வெளிப்படுத்த விரும்புகிறார்கள்?” என்று கேட்டுள்ளார் பூரி ஜெகன்நாத்.
இது போன்றவர்களின் சோஷியல் மீடியா கணக்குகளை ஆதார் எண்ணுடன் இணைக்கும்போது தான், அவர்கள் யார், அவர்களின் நோக்கம் என்ன என்கிற விவரம் தெரியவரும் என்றும் கூறியுள்ளார்.