இசை மட்டும் தான்... நடிக்க வர மாட்டேன்: அனிருத் | 'ராய் ராய் ரா ரா'- ராம் சரணின் அதிரடி நடனம் குறித்து சிரஞ்சீவி வியந்து வெளியிட்ட பதிவு! | நடிகர் ஹரிஷ் கல்யாண் - நர்மதா தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது! | 44 அரசுப் பள்ளிகளுக்கு விஜய் தேவரகொண்டா உதவி | ரஜினி ஒரு வித்தைக்காரர் : சுராஜ் வெஞ்சரமூடு | மார்ச் 6ல் ஓடிடியில் 'வித் லவ்' | தெலுங்கிலும் ஒரு ‛கில்லர்' : எஸ்ஜே சூர்யா என்ன செய்ய போகிறார் | தனிப்பட்ட வாழ்க்கைக்கு கருத்து கூறுவது அநாகரிகம் : ஆரி | ‛தெறி' ரீமேக்கா ‛உஸ்தாத் பகத்சிங்' : இயக்குனர் பதில் | கலை நிகழ்ச்சி போல நடந்த சங்கீத் வைபவம் : விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நெகிழ்ச்சி |

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த 'அமரன்' படத்தில் ஹீரோவாக நடித்தார் சிவகார்த்திகேயன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். அந்த படத்தில் கமல் நடிக்கவில்லை. அவருடன் நடிக்க வேண்டும் என்ற சிவகார்த்திகேயனின் ஆசை நிறைவேறவில்லை. இப்போது. மீண்டும் கமல் தயாரிக்கும் 'சேயோன்' படத்தில் நடிக்கப்போகிறார். அந்த படத்தை 'தாய்கிழவி'யை இயக்கிய சிவக்குமார் முருகேசன் இயக்க உள்ளார். இதில் கமல் கவுரவ வேடத்தில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
காரணம் தாய்கிழவியில் கமலின் பாடல்களை சிறப்பாக பயன்படுத்தி இருந்தார் சிவகுமார் முருகேசன். அவர் தீவிர கமல் ரசிகர் எனக் கூறப்படுகிறது. அதனால் சேயோன் படத்தில் கமலை நடிக்க வைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் சேயோன் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கமலை பாட வைக்கவும் விரும்புகிறாராம். கமல் என்ன முடிவெடிக்கிறாரோ?




