சாரா அர்ஜுனின் வளர்ச்சி பெருமையாக உள்ளது! - சொல்கிறார் இயக்குனர் ஏ.எல்.விஜய் | விஜய்யின் ஜனநாயகனுக்கு மார்ச் 17ல் சென்சார் சான்றிதழ்! | லெஜெண்ட் சரவணனின் 'லீடர்' படத்தின் டீசர் வெளியானது! | சிக்ஸ் பேக் விபரீதமான முயற்சி! - நடிகர் பரத் | மார்ச் 27ம் தேதியன்று திரைக்கு வரும் ஹாப்பி ராஜ்! | சொன்ன தேதிக்கு முன்பே திரைக்கு வருகிறது 'உஸ்தாத் பகத்சிங்' | 3 வருடங்களுக்கு பிறகு நாயகியாக நடிக்கும் ரைசா வில்சன் | ஆங்கிலோ இந்திய பெண்ணாக நடிக்கும் ப்ரீத்தி முகுந்தன் | நடிகர் ஆனார் அஜித் அண்ணன் | பிளாஷ்பேக்: சிங்கிள் ஷாட் சண்டை காட்சியில் முதலில் நடித்த விஜயகாந்த் |

சுரேஷ் சங்கையா இயக்கத்தில் யோகி பாபு கதை நாயகனாக நடிக்கும் படம் 'கெணத்த காணோம்'. இதில்கிராமத்து கோயில் பூசாரியாக அவர் வருகிறார். லவ்லின் ஹீரோயின். ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியவர் சுரேஷ் சங்கையா. இவர் சமீபத்தில் காலமாகிவிட்ட நிலையில் அவரின் நண்பர்கள் இந்த படத்தை வெளியே கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய யோகிபாபு, ''ஒரு கிடாயின் கருணை மனு படத்திலேயே நான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது ஹீரோவா என பயந்துபோய் நடிக்கவில்லை. ஒரு சின்ன கேரக்டரில் நடிக்கலாம் என்றால் அதுவும் நடக்கவில்லை. பின்னர் கெணத்தை காணோம் படத்தில் என்னை நடிக்க வைத்தார் 'காக்கா முட்டை' மணிகண்டன் உதவியாளர் சுரேஷ்.
நானும் லொள்ளுசபா ராம் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி நிறைய கஷ்டப்பட்டு தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். தொடர்ச்சியாக உதவி இயக்குனர்களுக்கு உதவத் தயார். இப்போது கூட என் கதையில் ஒரு உதவி இயக்குனர் ஒரு படம் இயக்கி வருகிறார். சுரேஷ் சங்கையா குடும்பத்திற்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன்'' எனக் கூறிவிட்டு மேடையிலே செக் எழுதி கையெழுத்து போட்டு அவர் மனைவியிடம் கொடுத்தார்.
எவ்வளவு தொகை என இரு தரப்பும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஆனால் ஒரு லட்சத்துக்கு மேல் என்று கூறப்படுகிறது. நிவாஸ் கே பிரசன்னா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் கிராமத்தில் கிணறு தோண்டும் போது என்ன கிடைக்கிறது. அதனால் என்ன பிரச்னை என்ற ரீதியில் கதை செல்கிறது.




