ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
எங்கேயும் எப்போதும் படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமானவர் சர்வானந்த்.. ஆனால் தமிழில் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தெலுங்கு திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக வலம் வருகிறார் சர்வானந்த். அந்தவகையில் கடந்த மார்ச் மாதம் தெலுங்கில் இவர் நடித்த 'ஸ்ரீகரம்' என்கிற படம் வெளியானது.
இந்தப்படம் வெளியான சமயத்தில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து சன் நெக்ஸ்ட் ஒடிடி பிளாட்பார்மில் வெளியானபோதும் கூட வசூல் ரீதியான வரவேற்பை பெற்றதாம். ஆனாலும் தனக்கு தரப்பட வேண்டிய சம்பள பாக்கித்தொகையை மட்டும் தயாரிப்பாளர் தராமல் இழுத்தடிப்பதால் அவர்மீது சட்டரீதியாக வழக்கு தொடர்ந்திருக்கிறாராம் சர்வானந்த்.
ஸ்ரீகரம் படத்திற்காக சர்வானந்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டு ரிலீசுக்கு முன்பே நான்கு கோடி ரூபாய் கொடுக்கப்பட்டு விட்டதாம். பட ரிலீசுக்கு பிறகு மீதி இரண்டு கோடியை தருவதாக சொன்னவர்கள் வெறும் 50 லட்சம் மட்டுமே கொடுத்துள்ளார்களாம். இதையடுத்து மீதி ஒன்றரை கோடியை தனக்கு செட்டில் செய்யுமாறு தயாரிப்பாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கையில் இறங்கியுள்ளாராம் சர்வானந்த்