நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், சில வருடங்கள் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‛பேட்ட', விஜய்யின் ‛மாஸ்டர்' என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தென்னிந்திய அளவில் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் இடையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ‛தங்கலான்' படத்தின் மூலம் மீண்டும் விறுவிறுப்பாக தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‛ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‛ஹிருதயபூர்வம்' என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தமிழில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‛சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய இவர், ‛‛சர்தார் 2 படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. வரும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். தமிழில் அடுத்து நான் நடிக்கும் படம் குறித்து அதன் பிறகு அறிவிக்கிறேன்,'' என்று கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.