சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
மலையாளத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், சில வருடங்கள் படங்கள் எதுவும் நடிக்காமல் இருந்தார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த ‛பேட்ட', விஜய்யின் ‛மாஸ்டர்' என தொடர்ந்து முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்று தென்னிந்திய அளவில் பிரபலமானார். அதன்பிறகு சில படங்களில் நடித்தாலும் இடையில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடந்த வருடம் வெளியான ‛தங்கலான்' படத்தின் மூலம் மீண்டும் விறுவிறுப்பாக தனது அடுத்த இன்னிங்ஸை துவங்கியுள்ளார்.
அந்த வகையில் தற்போது தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக ‛ராஜா சாப்' படத்தில் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லாலுடன் இணைந்து ‛ஹிருதயபூர்வம்' என்கிற படத்திலும் நடித்து முடித்துவிட்டார். தமிழில் மித்ரன் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‛சர்தார் 2' படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன். சமீபத்தில் சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் உரையாடிய இவர், ‛‛சர்தார் 2 படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டது. வரும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும். தமிழில் அடுத்து நான் நடிக்கும் படம் குறித்து அதன் பிறகு அறிவிக்கிறேன்,'' என்று கூறியுள்ளார் மாளவிகா மோகனன்.