நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

அர்ஜுன் ரெட்டி படத்தைத் தொடர்ந்து ஹிந்தியில் அதன் ரீமேக்கான கபீர் சிங் மற்றும் அனிமல் உள்ளிட்ட படங்களை இயக்கி டோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட்டிலும் வலுவான இயக்குனராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அடுத்ததாக இவர் பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரிட் என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து தீபிகா படுகோனே வெளியேறிவிட்டார் என்றும் இயக்குனருடன் கருத்தியலாக ஒத்து வராததால் இந்த படத்தில் இருந்து அவர் வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
அதே சமயம் தீபிகா படுகோனே ஏகப்பட்ட நிபந்தனைகளை விதித்ததால்தான் இயக்குனராகவே அவரை இந்த படத்தில் இருந்து கழட்டி விட்டார் என்று புதிய தகவல் ஒன்றும் படக்குழுவினர் தரப்பிலிருந்து தற்போது வெளியாகி உள்ளது.. கடந்த வருடமே இந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார் என்ற செய்தி வெளியான நிலையில் கால்ஷீட் ஒத்து வராததால் இதில் நடிக்கவில்லை என்று தீபிகா படுகோனே கூறியிருந்தார். ஆனாலும் அவருக்காக தேதிகள் மாற்றப்பட்டு படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டார். இடையில் கர்ப்பமாக இருந்த அவர் தற்போது குழந்தை பெற்றுக்கொண்டு சில மாதங்களே ஆன நிலையில் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வது குறித்து சில நிபந்தனைகளை விதித்தாராம்.
அதாவது தினசரி படப்பிடிப்பில் மொத்தமே எட்டு மணி நேரம் தான் கலந்து கொள்வேன் என கூறியுள்ளார் தீபிகா. அது மட்டுமல்ல, அவருக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 20 கோடி வரை தருவதாக சொல்லப்பட்ட நிலையில் கூட படத்தின் லாபத்திலும் பங்கு கேட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் தெலுங்கு பேசி நடிக்க மாட்டேன் என கூறியதாகவும்... இப்படி பல நிபந்தனைகளை அவர் விதித்ததால் தான் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா தானாகவே தீபிகா படுகோனேவை விலக்கி விட்டார் என்றும் வேறு கதாநாயகி தேடும் பணிகள் துவங்கியுள்ளது என்றும் தற்போது கூறப்படுகிறது.