ஒரே நாளில் மோதும் செல்வராகவன் - தனுஷ் | ரஜினியின் ஜெயிலர் படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர் | குஷ்புவின் காலில் ஏற்பட்ட திடீர் காயம் | சர்வதேச தரத்தில் தங்கலான் பாடல்கள் : ஜி.வி.பிரகாஷ் | டுவிட்டர் டிரெண்டிங்கில் “#JusticeforVigneshShivan” | 100 கோடி வசூலில் 'ஹாட்ரிக்' அடித்த 'பதான்' | 'அஜித் 62' குழப்பத்திற்கு என்ன காரணம்? | அறிவிப்பே வரவில்லை, அதற்குள் விற்கப்பட்ட 'விஜய் 67' | ஹீரோயின் ஆனார் ஜாக்குலின் | ஷசாம் - பியூரி ஆப் காட் : தமிழில் அடுத்து வெளிவரும் சூப்பர் ஹீரோ படம் |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.. இவர் தெலுங்கில் கே.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் அறிமுகமான 'கங்கோத்ரி' என்கிற படம் வெளியாகி பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இதை விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இதனை நினைவு கூர்ந்துள்ள அல்லு அர்ஜுன், ”என்னுடைய இந்த பதினெட்டு ஆண்டு பயணத்தில் உடன் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. என் மனம் முழுதும் நன்றியால் நிரம்பி வழிகிறது. இத்தனை ஆண்டுகளால் என் மீது காட்டப்பட்டு வந்த அளவற்ற அன்பினால் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டுளேன்” என கூறியுள்ளார்.
கங்கோத்ரி படத்தில் அறிமுகமானாலும் அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா படம் தான் அல்லு அர்ஜுனை முன்னணி நடிகராக உயர்த்தியது. தற்போது அதே சுகுமார் இயக்கத்தில் தான், 'புஷ்பா' என்கிற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.