ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பவன் கல்யாண். இவருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவவில் வெறித்தனமான ரசிகர்கள் இருக்கிறார்கள். ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி அதை நடத்தியும் வருகிறார். தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் ரசிகர் ஒருவரை நேரில் சந்தித்து அவருக்கு உதவி செய்து அனைவரிடன் பாராட்டையும் பெற்று வருகிறார்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள லிங்கலா கிராமத்தில் வசித்து வரும் பார்கவா என்பவர் தீவிரமான பவன் கல்யாண் ரசிகர். 19 வயதான பார்கவாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நிலை புற்று நோயால் உயிருக்கு போராடி வருகிறார். பார்கவாவைப் பற்றிக் கேள்விப்பட்ட பவன் கல்யாண் அவரை நேரில் சென்று சந்தித்து, ஆறுதல் கூறியுள்ளார். அத்துடன் பார்கவாவின் மருத்துவச் செலவுகளுக்கு 5லட்ச ரூபாயும், வெள்ளி விநாயகர் சிலையையும் வழங்கினார்.