ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
கொரோனா தாக்கம் ஆரம்பித்த சமயத்தில் கேரளாவில் மூடப்பட்ட தியேட்டர்கள் கடந்த ஜனவரி மாதமே திறக்கப்பட்டாலும் மூன்று காட்சிகள் மட்டுமே திரையிட அனுமதிக்கப்பட்டன. இரவுக்காட்சிக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் மோகன்லால் கூட தனது த்ரிஷ்யம்-2 படத்தை ஓடிடி தளத்தில் தான் ரிலீஸ் செய்தார். இந்தநிலையில் நேற்று முதல் (மார்ச்-11) இரவுக்காட்சியையும் சேர்த்து நான்கு காட்சிகளை திரையிட்டுக்கொள்ள கேரள அரசு அனுமதி அளித்தது.
இதை தொடர்ந்து நேற்று முதல் படமாக மம்முட்டி நடித்த 'தி பிரைஸ்ட்' என்கிற படம் தியேட்டர்களில் வெளியானது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு, நீண்ட நாட்கள் கழித்து, தியேட்டர் அதிபர்கள் ஆனந்த கண்ணீர் வடிக்கும் விதமாக பல இடங்களில் பல காட்சிகளுக்கு ஹவுஸ்புல் போர்டு மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் நிறைய பார்க்க முடிந்தது.
மர்ம த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து முதன்முதலாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார் என்பதும் தியேட்டர்களுக்கு அதிகம் ரசிகர்கள் வர காரணமாக அமைந்தது என்று தியேட்டர் வட்டாரங்களில் கூறப்படுகிறது.