இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
மலையாள சினிமாவின் ஆக்சன் பட இயக்குனர்களின் பிதாமகன் என அழைக்கப்படுபவர் இயக்குனர் ஜோஷி. முன்னணி நடிகர்களை மட்டுமே வைத்து படங்களை இயக்கிவந்த இவர், கடந்த சில வருடங்களாக இறங்கு முகத்தில் இருக்கிறார். இந்தநிலையில் இவரது பல வெற்றிப்படங்களில் நடித்த சுரேஷ்கோபி, இவரை கைதூக்கி விடும் விதமாக நட்புக்கரம் நீட்டியுள்ளார். அந்தவகையில் பாப்பன் என்கிற படம் இவர்களது கூட்டணியில் தற்போது உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிகை கனிகா இணைந்துள்ளார். கடந்த பத்து வருடங்களுக்கு முன் இதே ஜோஷி டைரக்சனில், 'கிறிஸ்டியன் பிரதர்ஸ்' என்கிற படத்தில் சுரேஷ்கோபிக்கு ஜோடியாக கனிகா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.. 'பாப்பன்' படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் ஜோஷியுடனும் சுரேஷ்கோபியுடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனிகா, “மீண்டும் என் குடும்பத்தில் இணைந்தது போல உள்ளது” என கூறியுள்ளார்.