தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்தத் தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் த்ரிஷயம்.. தற்போது இந்தப்படத்தின் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம்-2 தயாராகி, வரும் பிப்-19ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்தப்படத்திற்கான புரமோஷன் பணிகள் தற்போது துவங்கியுள்ளன. அதன் ஒரு பகுதியாக தான் பேசும் ஒரு வீடியோ ஒன்றை தனது சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் மோகன்லால். கூடவே ரசிகர்களுக்கு ஒரு கேள்வியும் எழுப்பியுள்ளார்.
அந்த வீடியோவில் முதல் பாகத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இரத்தின சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார் மோகன்லால். மேலும், “உங்கள் குடும்பத்தை காக்க நீங்கள் எந்த அளவுக்கு துணிவீர்கள்” என கேள்வியும் எழுப்பியுள்ளார். அதுமட்டுமல்ல, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளதுடன், “:நான் எப்போதுமே ஒரு படி முன்னாடியே செல்வேன்.. என்னுடைய அடுத்த மூவ் என்னவாக இருக்கும் என யாராவது யூகிக்க முடியுமா ?. உங்களுடைய தியரிகளை ஷேர் பண்ணுங்கள்” என்று ரசிகர்களுக்கு சவாலும் விடுத்துள்ளார்.




