ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த பத்து வருடங்களில் மலையாள திரையுலகின் இளம் முன்னணி நடிகராக உயர்ந்துவிட்ட துல்கர் சல்மான்,. தற்போது முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் சல்யூட் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்தப்படத்தை இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்குகிறார். இவர் தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல மும்பை போலீஸ் என்கிற சூப்பர்ஹிட் போலீஸ் படத்தையும் இயக்கியவர்.
இந்தப்படத்தின் கதாநாயகியாக பாலிவுட்டை சேர்ந்த டயானா பென்ட்டி என்பவர் நடிக்கிறார்.. இவர் லக்னோ சென்ட்ரல், தி ஸ்டோரி ஆப் பொக்ரான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன் இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இந்தநிலையில் நாயகி டயானா பென்ட்டியும் நேற்று முதல் இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் இருந்து துல்கருடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள டயானா, முதன்முறையாக மலையாளத்தில் நடிப்பது, அதுவும் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.