ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
கடந்த 2019ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நடிகர் பிரித்விராஜ் இயக்கிய இந்தப்படத்திற்கு பிரபல மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரும் பிரபல கதாசிரியருமான முரளிகோபி கதை எழுதி இருந்தார். இவர் மறைந்த சீனியர் நடிகரான பரத் கோபியின் மகன் ஆவார்.
வழக்கமாக இதற்கு முன்பு திலீப் நடித்த கம்மர சம்பவம், பிரித்விராஜ் நடித்த 'தியான்' என முரளிகோபி எழுதிய கதைகள் படமாக மாறியபோது அவை வெற்றியை பெற தவறி இருந்தன.. ஆனால் அந்த ராசியை லூசிபர் படம் முறியடித்து விட்டது. இந்தநிலையில் தற்போது மம்முட்டி நடிக்க இருக்கும் பிரமாண்ட படத்திற்கு கதை எழுதுகிறார் முரளிகோபி. அறிமுக இயக்குனர் ஷிபு பஷீர் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஜய்பாபு.