ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் | பிளாஷ்பேக்: சிவாஜிக்கு ஜோடியாக நடித்த அக்கா, தங்கை |

கடந்த 2019ல் மலையாளத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. நடிகர் பிரித்விராஜ் இயக்கிய இந்தப்படத்திற்கு பிரபல மலையாள குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகரும் பிரபல கதாசிரியருமான முரளிகோபி கதை எழுதி இருந்தார். இவர் மறைந்த சீனியர் நடிகரான பரத் கோபியின் மகன் ஆவார்.
வழக்கமாக இதற்கு முன்பு திலீப் நடித்த கம்மர சம்பவம், பிரித்விராஜ் நடித்த 'தியான்' என முரளிகோபி எழுதிய கதைகள் படமாக மாறியபோது அவை வெற்றியை பெற தவறி இருந்தன.. ஆனால் அந்த ராசியை லூசிபர் படம் முறியடித்து விட்டது. இந்தநிலையில் தற்போது மம்முட்டி நடிக்க இருக்கும் பிரமாண்ட படத்திற்கு கதை எழுதுகிறார் முரளிகோபி. அறிமுக இயக்குனர் ஷிபு பஷீர் என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை இன்று வெளியிட்டுள்ளார் இந்தப்படத்தின் தயாரிப்பாளர் விஜய்பாபு.




