தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அம்மா என அழைக்கப்படும் மலையாள நடிகர் சங்கத்தின் புதிய கட்டடத்திற்கு நேற்று கொச்சியில் திறப்பு விழா நடைபெற்றுள்ளது. மோகன்லால்-மம்முட்டி இருவரும் இணைந்து இந்த கட்டிடத்தை திறந்து வைத்தனர். மற்ற முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். கடந்த சில வருடங்களில் இரண்டுக்கும் மேற்பய்ட்ட முறை நடிகர் சங்கத்துக்கான அலுவலகத்தை வெவ்வேறு இடங்களில் மாற்றி வந்தனர்..
தற்போது பத்துகோடி ரூபாய் செலவில் நான்கு தளங்களை கொண்ட புதிய கட்டடத்தை கட்டியுள்ளனர். இந்த கட்டடத்தில் 150 பேர் அமர்ந்து பார்க்கும் விதமான சிறிய தியேட்டர், கதாசிரியர்கள், இயக்குனர்களுக்கான தனித்தனி டிஸ்கஷன் ரூம் மற்றும் நடிகர்கள் கதை கேட்பதற்கான தனிதனி அறைகள் என சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளனவாம்.