‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் | கதை திருடும் சினிமா இயக்குனர்கள்: எழுத்தாளர் ஆர்னிகா நாசர் ஆவேசம் | காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் |
1992ல் கேரளவையையே உலுக்கிய கொலை வழக்கு தான் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கு.. 28 வருடங்கள் கழிந்த நிலையில், இவரை கொலை செய்த குற்றத்துக்காக பாதிரியார் ஒருவரும் கன்னியாஸ்திரி ஒருவரும் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டாலும் இந்த கொலை நிகழ்வை நேரில் பார்த்த முக்கிய சாட்சியான திருடன் ஒருவனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கையும் அந்த நல்ல திருடனையும் மையப்படுத்தி சோரன் என்கிற படம் உருவாகியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சமீபத்தில் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இந்தப்படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்பது தான். இந்தப்படம் இரவில் நடக்கும் கதை என்பதால் மொத்தப்படத்தையும் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் செயின்ட் அந்திக்காடு. அந்தவகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் இரவு நேரங்களில் மட்டுமே படமாக்கப்பட்ட முதல் படம் என்கிற பெருமை எங்களுக்கு கிடைத்துள்ளது என்கிறார் மகிழ்ச்சியுடன்.