ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
1992ல் கேரளவையையே உலுக்கிய கொலை வழக்கு தான் கோட்டயத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி அபயா கொல்லப்பட்ட வழக்கு.. 28 வருடங்கள் கழிந்த நிலையில், இவரை கொலை செய்த குற்றத்துக்காக பாதிரியார் ஒருவரும் கன்னியாஸ்திரி ஒருவரும் சமீபத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இது தற்கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டாலும் இந்த கொலை நிகழ்வை நேரில் பார்த்த முக்கிய சாட்சியான திருடன் ஒருவனால் உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
இந்தநிலையில் இந்த கொலை வழக்கையும் அந்த நல்ல திருடனையும் மையப்படுத்தி சோரன் என்கிற படம் உருவாகியுள்ளது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சமீபத்தில் இந்த கொலை வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்னதாக இந்தப்படம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது என்பது தான். இந்தப்படம் இரவில் நடக்கும் கதை என்பதால் மொத்தப்படத்தையும் இரவு நேரங்களில் மட்டுமே படப்பிடிப்பு நடத்தியுள்ளார் இயக்குனர் செயின்ட் அந்திக்காடு. அந்தவகையில் இந்தியாவிலேயே முதன்முதலில் இரவு நேரங்களில் மட்டுமே படமாக்கப்பட்ட முதல் படம் என்கிற பெருமை எங்களுக்கு கிடைத்துள்ளது என்கிறார் மகிழ்ச்சியுடன்.