பிளாஷ்பேக்: “தீபாவளி” நாளன்று திரையில் தேசப்பற்றை விதைத்த “கப்பலோட்டிய தமிழன்” | அம்மாவுக்கும் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடிய மகிழ்ச்சியில் காவ்யா மாதவன் | பஹத் பாசிலின் கண்களில் தெரியும் வெறித்தனம் ; சிலாகிக்கும் ராஜமவுலியின் மகன் | தீபாவளி வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த் | அமிதாப் பச்சனின் தீபாவளி கொண்டாட்டத்தில் மகளுடன் ஆப்சென்ட் ஆன ஐஸ்வர்யா ராய் | ‛பேட்டில் ஆப் கல்வான்' படப்பிடிப்பில் சல்மான்கானுக்கு மொபைல் போன் அனுமதி மறுப்பு | இது ‛டியூட்' தீபாவளி: மத்தாப்பாய் மமிதா பைஜூ | 'என்ன சொல்ல போகிறார்(ய்)' தேஜூ அஸ்வினி | சேலை விற்றேன், மாடலிங் செய்தேன் : 'முல்லை' லாவண்யா | வாடும் மனசை பாட்டால் வருடி வலி போக்கும் மதுஐயர் |
மலையாள திரையுலகில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரபல இயக்குனராக வலம் வருபவர் சத்யன் அந்திக்காடு. இவரது இரண்டு மகன்களில் ஒருவரான அனூப் சத்யன், கடந்தாண்டு துல்கர் சல்மான் நடித்த 'வரனே ஆவிஷ்யமுண்டு என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். இன்னொருவரான அகில் சத்யன், நடிகர் பஹத் பாசிலை வைத்து தனது முதல் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப்படத்திற்கு 'பாச்சுவும் அற்புத விளக்கும்' என டைட்டில் வைக்கப்பட்டு, தற்போது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தப்படத்திற்கு கடந்தாண்டு ஜனவரி மாதமே பூஜை போடப்பட்டாலும் கொரோனா தாக்கம் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்தநிலையில் வரும் ஏப்ரல் மாதத்தில் இதன் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்களாம்.. ஏற்கனவே இயக்குனர் சத்யன் அந்திக்காடு டைரக்சனில் ஒரு இந்தியன் பிரணயகதா மற்றும் ஞான் பிரகாசன் ஆகிய படங்களில் பஹத் பாசில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.