சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎப்-2 படம் தயாராகி வருகிறது. இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார் நடிகர் பிரித்விராஜ்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு ஏரியாவிலும் அடுத்தடுத்து கால் பதித்து வரும் பிரித்விராஜ், கடந்த 2018ல் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை தனது பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் சார்பில் கேரளாவில் வெளியிட்டார். அதை தொடர்ந்து சில படங்களை வெளியிட்ட பிரித்விராஜ், தற்போது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேஜிஎப்-2 படத்தையும் கேரளாவில் வெளியிட இருக்கிறார்.
இதுகுறித்து பிரித்விராஜ் கூறியுள்ளதாவது, “கேஜிஎப் படங்களின் பாகங்களுக்கு நான் தீவிர ரசிகன். லூசிபர் படத்தை நான் முடித்த பிறகு, கேஜிஎப் தயாரிப்பாளரிடம் இருந்து, இணைந்து பணியாற்ற அழைப்பு வந்தது. அந்த முதல் வாய்ப்பே அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேஜிஎப்-2 படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என குறிபிட்டுள்ளார்.