சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி, தென்னிந்தியா மட்டுமல்லாமல் இந்தியிலும் வரவேற்பை பெற்ற படம் கேஜிஎப். யஷ் கதாநாயகனாக நடித்த இந்தப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கி இருந்தார். இதன் வெற்றியை தொடர்ந்து தற்போது கேஜிஎப்-2 படம் தயாராகி வருகிறது. இதில் வில்லனாக பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இதன் கேரள வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ளார் நடிகர் பிரித்விராஜ்.
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொரு ஏரியாவிலும் அடுத்தடுத்து கால் பதித்து வரும் பிரித்விராஜ், கடந்த 2018ல் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தை தனது பிரித்விராஜ் புரொடக்சன்ஸ் சார்பில் கேரளாவில் வெளியிட்டார். அதை தொடர்ந்து சில படங்களை வெளியிட்ட பிரித்விராஜ், தற்போது மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கேஜிஎப்-2 படத்தையும் கேரளாவில் வெளியிட இருக்கிறார்.
இதுகுறித்து பிரித்விராஜ் கூறியுள்ளதாவது, “கேஜிஎப் படங்களின் பாகங்களுக்கு நான் தீவிர ரசிகன். லூசிபர் படத்தை நான் முடித்த பிறகு, கேஜிஎப் தயாரிப்பாளரிடம் இருந்து, இணைந்து பணியாற்ற அழைப்பு வந்தது. அந்த முதல் வாய்ப்பே அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கேஜிஎப்-2 படத்தை வெளியிடுவதன் மூலம் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என குறிபிட்டுள்ளார்.