தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
கடந்த ஏழு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் த்ரிஷ்யம்.. மோகன்லால்-மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது த்ரிஷ்யம்-2 என்கிற பெயரில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்தப்படம் அமேசான் பிரைம் நிறுவனத்தின் ஓடிடி தளத்தில் ரிலீசாகும் என அறிவிப்பு வெளியானது. வரும் ஜனவரி-26ஆம் தேதி இந்தப்படம் வெளியாகும் என எதிர்பார்ப்பதாக இயக்குனர் ஜீத்து ஜோசப் கூறியுள்ளார். மேலும் இந்தப்படம் தியேட்டர்களில் வெளியாகாததில் தனக்கு வருத்தமே என்றும் கூறியுள்ளார் ஜீத்து ஜோசப்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இந்தப்படத்தை எடுக்கும்போதே, விரைவில் நிலைமை சீராகிவிடும் அதனால் தியேட்டர்களில் வெளியிடலாம் என்கிற எண்ணத்தில் தான் இருந்தோம்.. ஆனால் டிச-17ஆம் தேதி இதன் டீசர் வெளியீட்டுக்கு பிறகு அந்த முடிவை மாற்றிக் கொண்டு ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தோம்.. பிரிட்டனில் இருந்து புதிய வைரஸ் ஒன்று உருவாகியுள்ள செய்தி வெளியானபின் தான் இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம்.. இந்தப்படம் குறுகிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது என்பதால் தயாரிப்பாளருக்கு இழப்பு ஒன்றும் இல்லை.. அதேசமயம் இந்தப்படத்தின் இசை, ஒலி வடிவமைப்பு, ஒளிப்பதிவு ஆகியவற்றை தியேட்டர்களில் ரசிகர்களால் பார்த்து ரசிக்க முடியாதே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது.. ஆனால் மோகன்லாலை வைத்து, நான் இயக்கிவரும், ராம் படத்தை நிச்சயம் தியேட்டர்களில் தான் ரிலீஸ் செய்வேன்” என கூறியுள்ளார்.