ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த சில மாதங்களுக்கு முன் மலையாளத்தில் 'ஒரு ஆதார் லவ்' படத்தில் இடம்பெற்ற மாணிக்ய மலராய பூவி பாடலில் தனது புருவம் உயர்த்தல் மற்றும் கண் சிமிட்டல்களால் புகழ்பெற்றவர் புருவ அழகி பிரியா பிரகாஷ் வாரியர். அந்தப்படம் இன்னும் வெளியாகத நிலையில் பிரியா வாரியர் சில விளம்பரப்படங்களில் நடித்தும் விட்டார். பட வாய்ப்புகள் சில தேடிவந்தாலும் அதை சில காரணங்களால் தவிர்த்து வந்தார்.
இந்தநிலையில் 'ஸ்ரீதேவி பங்களா' என்கிற பாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரியா வாரியர். ஆனால் பிரசாந்த் மாம்புள்ளி என்கிற மலையாள இயக்குனர் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இவர் சில வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் வெறும் 19 மணி நேரத்தில் 'பகவான்' என்கிற ஆக்சன் படத்தை எடுத்து சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.