ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
மலையாளத்தில் திலீப் நடித்த ராம்லீலா என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கி, இயக்குனராக அறிமுகமானவர் அருண்கோபி. முதல்படத்தையே 100 கோடி வசூல் கிளப்பில் இணைத்த அருண்கோபிக்கு பரிசாக தனது மகன் பிரணவ் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று கொடுத்தார் மோகன்லால்.
இருபத்தியொன்னாம் நூற்றாண்டு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்தப்படத்தையும் தற்போது இயக்கி முடித்துவிட்ட அருண்கோபிக்கு அடுத்து மிகப்பெரிய ஜாக்பாட்டாக மோகன்லால் படத்தையே இயக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை தயாரித்த தோமிச்சான் முலகுபாடம் தான் இந்தப்படத்தை தயாரிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அவரே வெளியிட்டுள்ளார். அதுமட்டுமல்ல, பிரணவ்-அருண்கோபி கூட்டணியில் உருவாகியுள்ள இருபத்தியொன்னாம் நூற்றாண்டு படத்தையும் இவர்தான் தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.