ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கெளதம்மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். இதே படத்தின் தெலுங்கு பதிப்பில் நாக சைதன்யாவுடன் நடித்தார். அதையடுத்து தமிழில் சத்ரியன், இப்படை வெல்லும் படங்களில் நடித்த மஞ்சிமா தெலுங்கில் வேறு படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், தற்போது அவர் என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படமான கதாநாயகுடுவில் சந்திரபாபு நாயுடுவின் மனைவியாக நாரா புவனேஸ்வரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் சந்திரபாபு நாயுடுவாக ராணா நடிக்கிறார்.