ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
மம்முட்டி தற்போது மலையாளத்தில் 'மதுரராஜா' மற்றும் தெலுங்கில் 'யாத்ரா' என இரு படங்களில் மாறிமாறி நடித்து வருகிறார். தற்சமயம் ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் யாத்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இந்தநிலையில் 'புலி முருகன்' படத்தை தொடர்ந்து 'மதுரராஜா' படத்தை இயக்கிவரும் இயக்குனர் வைசாக், 'யாத்ரா' படப்பிடிப்பு தளத்திற்கே சென்று மம்முட்டியை சந்தித்து பேசியுள்ளார்.
மதுரராஜா படத்தின் சில காட்சிகள் பற்றிய டிஸ்கஷனுக்காக, 'யாத்ரா' படப்பிடிப்பு தளத்திற்கே நேரில் தான் வந்ததாக கூறியுள்ள இயக்குனர் வைசாக், யாத்ரா படப்பிடிப்பை, அதில் பங்கேற்ற பிரமாண்டமான கூட்டத்தை பார்த்து மிரண்டு போனதாகவும் கூறியுள்ளார். கிட்டத்தட்ட 8000 பேர் வரை கலந்துகொண்ட இந்த கூட்டத்துடன் செல்பி எடுக்க முயன்ற வைசாக், அவ்வளவு பெரிய கூட்டத்தை தன்னுடைய பிரேமுக்குள் அடக்க முடியவில்லை என பிரமித்துள்ளார்.