ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தமிழ் சினிமாவிலேயே பிசியாக இருக்கும் சரண்யா பொன்வண்ணன் மற்ற மொழிப்படங்களில் நடிப்பதில் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இந்தநிலையில் கடந்த 2010ல் மலையாளத்தில் 'புலிமான்' என்கிற படத்தில் நடித்த சரண்யா பொன்வண்ணன், தற்போது எட்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடித்துள்ளார்.
'ஒரு குப்ரசிதா பையன்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் இளம் நாயகன் டொவினோ தாமஸ், கதாநாயகனாக நடிக்க அவரது அம்மாவாக நடித்துள்ளார் சரண்யா பொன்வண்ணன். இந்தப்படத்தில் நடிகர் பசுபதியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அனு சித்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்தப்படம் வரும் நவ-9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.