விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
ஆரம்பத்தில் தமிழ் சினிமா பக்கம் அவ்வளவாக ஆர்வம் காட்டாத மலையாள நடிகர் பஹத் பாசில், கடந்த ஆண்டு வெளியான 'வேலைக்காரன்' படம் மூலம் தமிழ் திரையுலகுக்குள் நுழைந்தார். அதைத்தொடர்ந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்து முடித்துவிட்டார். அதேசமயம் அவராகவே வேண்டாம் என விலகிய மணிரத்னம் படமான செக்க சிவந்த வானம் இன்று வெளியாகியுள்ளது.
இருந்தாலும் மலையாளத்தில் தனது 'வரதன்' படம் வெளியாகி ஹிட்டான சந்தோஷத்தில் இருக்கிறார் பஹத் பாசில். இந்தநிலையில் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மலையாளத்தில் வெளியாகி கவனம் ஈர்த்த 'சூடானி ப்ரம் நைஜீரியா மற்றும் அருவி ஆகிய படங்களை பார்த்தபிறகு, அவற்றில் தன்னுடைய பங்களிப்பும் இருந்திருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார் பஹத் பாசில்.