ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஒரே ஒரு கண் சிமிட்டலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து, புருவ அழகி என பெயர் வாங்கிய ப்ரியா பிரகாஷ் வாரியருக்கு எதிரான வழக்குகளை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
ஒரு அடார் லவ் என்ற மலையாள திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில், புருவத்தை அழகாக அசைத்து கண் சிமிட்டி, ஒரே நாளில் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் ப்ரியா பிரகாஷ் வாரியர். இவரது கண் சிமிட்டலுக்காகவே அந்தப் பாடல் காட்சி இணையத்தில் வைரலானது.
ஆனால், அந்தப் பாடல் வரிகள் இஸ்லாமியர்களின் மத உணர்வை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆணையிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, ப்ரியா பிரகாஷ் வாரியரின் நடிப்பு யார் மனதையும் புண்படுத்தவில்லை. யாரையும் அவமதிக்கவில்லை என்று குறிப்பிட்டது. மேலும், ப்ரியா வாரியர் மீது நடவடிக்கை கோரும் அனைத்து வழக்குகளையும் நீதிபதிகள் ரத்து செய்தனர்.