ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கேரளாவையே சுழன்றடித்துள்ள வெள்ளப்பெருக்கால் நிலைகுலைந்து போயுள்ளது மொத்த கேரளமும். சாமான்ய மனிதர்களில் இருந்து திரையுலக பிரபலங்கள் வரை மீட்பு பணிகளிலும் நிவாரண பணிகளிலும் இறங்கி தங்களது பங்களிப்பை தந்து வருகின்றனர். ஆனால் நடிகர் துல்கர் சல்மான் முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு தனது பங்காக பத்து லட்சம் ரூபாய் அளித்திருந்தாலும், களத்தில் இறங்கி வேலை பார்க்கவில்லை.
தற்போது கேரளாவில் தான் இல்லையென்பதால், தன்னால் இந்த பணிகளில் ஈடுபட்டு மக்களுக்கு உதவ முடியவில்லையே என்கிற எண்ணம் தன்னை கொல்வதாக துல்கர் சல்மான் கூறியிருந்தார். அதற்கு "உங்களை யார் தடுத்தார்கள்" என்கிற விதமாக எதிர்மறை கருத்துக்களை கூறி பலரும் விமர்சித்தார்கள்.
இதனால் கோபமான துல்கர் சல்மான், "உங்களிடம் இருந்து லைக்குகள் பெற வேண்டும் என்பதற்காக எனது நேர்மையை நிரூபிக்க தேவையில்லை. என் மீது எதிர்மறையாக கருத்துக்களை பதிவிட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் நீங்கள் நிச்சயமாக பாதிக்கப்பட்டோருக்கு எந்த உதவியும் செய்திருக்க போவதில்லை. அந்தப்பக்கமே சென்றிருக்கவும் வாய்ப்பில்லை. நிச்சயம் உங்களை விட நான் எந்தவகையிலும் குறைந்தவன் அல்ல" என கொட்டி தீர்த்துள்ளார் துல்கர் சல்மான்.