ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
முதன்முறையாக கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்ற திருநங்கை தான் அஞ்சலி அமீர். கேரளாவை சேர்ந்த இவர் தமிழில் பேரன்பு படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தநிலையில் மலையாளத்தில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவரும் பங்கெடுத்துக் கொண்டார். கடந்தவாரம் உடல்நிலை சரியில்லாததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி, தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தநிலையில் கடந்த வாரம் எலிமினேசனுக்கு தேர்வான ஐந்து பேரில் அதிதி மேனன் என்பவர் வெளியேற்றப்படுவதாக மோகன்லால் அறிவித்தார். அவர் வெளியேறும் சமயத்தில் சரியாக அஞ்சலி அமீரிடம் இருந்து மோகன்லாலுக்கு போன் அழைப்பு வந்தது.
எலிமினேஷன் சமயத்தில் போன் பண்ணியதை அறிந்த அஞ்சலி அமீர், இந்தவாரம் யாரையும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற வேண்டாம் என மோகன்லாலிடம் வேண்டுகோள் வைத்தார். மோகன்லாலும் அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள, சோகத்தில் இருந்த அதிதி மேனன் உள்ளிட்ட போட்டியாளர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தனர்.