ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சமீபத்தில் தான் மலையாள நடிகர் சங்க தலைவராக பொறுப்பேற்றார் நடிகர் மோகன்லால். அதையடுத்து நடைபெற்ற கூட்டத்தில் ஏற்கனவே நடிகை விவகாரத்தில் சிக்கி சங்கத்தில் இருந்து விலக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் சங்கத்தில் சேர்த்துக்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.. இதற்கு நடிகைகள் தரப்பில் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் சிலர் சங்கத்தை விட்டும் விலகினர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட நடிகை வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றமும், ஒரு பெண் நீதிபதியும் நியமிக்கப்பட்ட வேண்டும் என மோகன்லால் வேண்டுகோள் வைத்தார். இதற்கு சங்கத்தில் உள்ள திலீப் ஆதரவாளர்களிடம் இருந்து எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
திலீப் பக்கம் தவறு இல்லையென்றால் அவர் இதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை என கூறியுள்ள மோகன்லால், இப்படி தேவையற்ற பிரச்னைகளுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தால், தலைவர் பொறுப்பை விட்டே தான் விலகிவிடுவேன் என எச்சரித்துள்ளார்.