விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
கேரள அரசு நடத்தவிருக்கும் திரைப்பட விருது வழங்கும் விழாவில் மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள கூடாது என நடிகர் பிரகாஷ்ராஜ் கையெழுத்திட்டுள்ளார் என ஒரு செய்தி நேற்று வெளியானது.. ஆனால் மோகன்லாலுக்கு எதிராக தான் கையெழுத்திடவில்லை என உடனடியாக மறுத்துள்ளார் பிரகாஷ்ராஜ்.
ஆனால் மோகன்லாலுக்கு எதிராக இந்த கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ள தேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் டாக்டர் பைஜூவோ, பிரகாஷ்ராஜ் கையெழுத்திட்டது உண்மை தான் என கூறியுள்ளதோடு அதில் ஒரு டுவிஸ்ட்டும் வைத்துள்ளார்.
அதாவது தாங்கள் கேரள அரசுக்கு அனுப்பிய கடிதத்தில் மோகன்லால் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள கூடாது என எங்கேயும் குறிப்பிடவில்லை என்றும், சிறப்பு விருந்தினராக திரையுலகை சேர்ந்த யாரையும் அழைக்க கூடாது என பொதுவாகவே குறிப்பிட்டிருந்ததாகவும் கூறினார்.
அதனால் தான் நடிகர் பிரகாஷ்ராஜூம் இந்த மனுவில் கையெழுத்திட்டிருந்தாலும், அதில் மோகன்லால் பெயர் இடம்பெறாததால், மோகன்லாலுக்கு எதிராக தான் கையெழுத்து போடவில்லை என தைரியமாக கூறியுள்ளதாக டாக்டர் பைஜூ விளக்கமளித்துள்ளார்.
மேலும், இந்த விஷயத்தில் மோகன்லால் மட்டுமல்ல, அவருக்கு பதிலாக மம்முட்டியை சிறப்பு விருந்தினராக அழைத்தால் கூட நாங்கள் பாரபட்சமின்றி இதேபோல எங்கள் எதிர்ப்பை காட்டுவோம் என்றும் டாக்டர் பைஜூ கூறியுள்ளார்.