ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த வருடம், மலையாள நடிகை கடத்தல் வழக்கில் சிக்கி கைதான நடிகர் திலீப், சில மாதங்களுக்கு முன் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்தநிலையில் இந்த வழக்கில் கேரள போலீசார் ஒருதலை பட்சமாகவே செயல்படுகிறார்கள் என்றும், இந்த வழக்கு சரியான திசையில் செல்ல வேண்டுமென்றால் இதனை சிபிஐயை விசாரிக்க உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார் திலீப்.
ஆனால், அரசு தரப்பு திலீப்பின் இந்த கோரிக்கைக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திலீப் வேண்டுமென்றே இந்த வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு கோரிக்கையை நீதிமன்றத்தில் வைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.