ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
எப்போதும் இல்லாத வகையில் ஆச்சர்யமாக மலையாள திரையுலகில் மம்முட்டி, மோகன்லால் என இரண்டு சூப்பர் ஸ்டார்களும் ஒரே நபரின் கதையில் நடிக்க இருக்கிறார்கள் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. வரலாற்று வீரனாகிய குஞ்சாலி மரக்காயர் என்பவரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படத்தில் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் மம்முட்டியும், அதே கதையில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலும் நடிக்க உள்ளனர்
இதற்கான வேலைகளை இரண்டு இயக்குனர்களும் துவங்கி விட்டனர். இப்படி ஒரே கதையை இரண்டு நடிகர்களும் நடிக்கும் போது எந்த படம் ஓடும் என்று ரசிகர்களுக்கு குழப்பம் வராதா என்ற கேள்வி அனைவருக்கும் எழுவது சகஜம். ஆனால் இந்த படம் எடுப்பதற்கு முன்பாக இயக்குனர் பிரியதர்ஷ்ன் மம்முட்டியிடம் இப்படி ஒரு படம் எடுக்கப்போவதை பற்றி கூறினாராம்.
மம்முட்டி அதை கேட்டுவிட்டு நீங்கள் எடுக்க போகும் படத்திற்கும் நாங்கள் எடுக்கப்போகும் கதைக்கும் எந்த சம்மதமும் இல்லை என்பதை உறுதிபட கூறினாராம் அதன்பிறகே நிம்மதியான ப்ரியஷ்ர்சன், மோகன்லாலை வைத்து வேறு கோணத்தில் படமாக்கும் அறிவிப்பை வெளியிட்டாராம்.