ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
படத்துக்கு படம் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து வரும் மலையாள நடிகர் ஜெயசூர்யா, தற்போது 'ஞான் மேரிக்குட்டி' என்கிற படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார். இந்தப்படம் நேற்று முன்தினம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப்படத்தின் முதல்நாள் முதல் காட்சியை எர்ணாகுளம் பத்மா தியேட்டரில் 50 திருநங்கைகளுடன் பார்த்து ரசித்தார் ஜெயசூர்யா.
ஜெயசூர்யாவின் கதாபாத்திரம் அடிக்கடி சிவப்பு சேலை அணிந்திருக்கும் என்பதால் இந்த 50 திருநங்கைகளும் சிவப்பு நிற உடையணிந்து இந்த திரைப்படத்தை காண வந்திருந்தனர். படத்தை பார்த்துவிட்டு, "திருநங்கைகள் மீது மக்கள் கொண்டு இருக்கும் தவறான அபிப்ராயம், கண்ணோட்டத்தை இந்த படம் மாறும்.. எங்களை மிகவும் கௌரவப்படுத்தியுள்ளனர்" என திருநங்கைகள் பாராட்டியுள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற இந்தப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கூட திருநங்கைகள் பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டு அவர்களில் ஐந்து பேரை மேடையேற்றி டிரைலரை வெளியிட வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.