விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
பிரபல கன்னட நடிகர் துனியா விஜய், பரபரப்புக்கு பெயர் போனவர். அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார். அப்படி ஒரு சர்ச்சைதான் போலீஸ் தேடி வந்த கன்னட தயாரிப்பாளர் சுந்தரை அவர் தப்பிக்க வைத்தது.
கடந்த ஆண்டு தயாரிப்பாளர் சுந்தர் தயாரித்த ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது அணையில் இருந்து தவறி விழுந்து 2 துணை நடிகர்கள் இறந்தனர். இது தொடர்பாக தயாரிப்பாளர் சுந்தர் மீது அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது, நடிகர்களுக்கு இன்சூரன்ஸ் எடுக்காதது உள்ளிட்ட பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்ய சுந்தரின் வீட்டுக்கு சென்றபோது அங்கே இருந்த நடிகர் துனியா விஜய், போலீசாரின் கவனத்தை திசை திருப்பி சுந்தரை தப்பிக்க வைத்தார்.
அதன்பிறகு போலீசார் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட சில பிரிவின் கீழ் துனியா விஜய் மீது வழக்கு தொடர்ந்து அவரையும் தேடி வந்தனர், அவர் தலைமறைவானர். இந்த நிலையில் துனியா விஜய், கோவையில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருப்பதாக பெங்களூரு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து வந்து கோவையில் தலைமறைவாக இருந்த துனியா விஜய்யை கைது செய்து பெங்களூர் அழைத்துச் சென்றனர்.