ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பொதுவாக தமிழோ, மலையாளமோ இரண்டு மொழி நடிகர்களும் மொழிபேதமின்றி இரண்டு திரையுலகங்களிலும் மாறிமாறி நடித்துக்கொண்டாலும் முலைப்பெரியாறு தண்ணீர் பிரச்சனை மட்டுமே இரண்டு தரப்பினருக்கும் சங்கடத்தை கொடுத்துக்கொண்டு இருக்கிறது.. ஆனாலும் காவிரி தண்ணீர் பிரச்சனை போல முல்லைப்பெரியாறு பிரச்சனையில் திரையுலக நட்சத்திரங்களை பொறுத்தவரை யாரும் யாரையும் தாக்கி பேசிக்கொள்வதில்லை.
அந்தவகையில் கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் வெளியான 'அங்கிள்' படத்தில் தமிழர்களின் மீதான தனது பாசத்தை சில காட்சிகளில் வெளிப்படுத்தியுள்ளார் நடிகர் மம்முட்டி. தனது நண்பரின் மகளுடன் காரில் கேரளாவுக்கு பயணிக்கும் மம்முட்டி வழியில் இரவில் தனது உறவினர் வீட்டில் தங்கிச்செல்லலாம் என நாயகியை அழைத்துச்செல்வார்..
ஆனால் அது தமிழர் ஒருவரின் வீடு.. அதற்கு நாயகி, சொந்தக்காரர்கள் என்று சொன்னீர்கள்.. ஆனால் தமிழர்களாக இருக்கிறார்களே என்பார். அதற்கு மம்முட்டி, ஏன் தமிழர்கள் நமக்கு சொந்தக்காரர்களாக இருக்க கூடாதா..? அவர்களும் நம் சகோதரர்கள் தான் என பெருமையாக கூறுவார்... அந்த தமிழராக தமிழ் நடிகர் மூணாறு ரமேஷ் நடித்துள்ளார். படத்தை மலையாள இயக்குனரான கிரிஷ் தாமோதர் என்பவர் இயக்கியுள்ளார்.