ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
செகண்ட் இன்னிங்சில் தென்னிந்திய மொழிகளில் பரவலாக வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார் தெலுங்கு நடிகர் ஜெகபதிபாபு. அடுத்தப்படியாக ஹிந்தியில் சல்மான் கான் நடிப்பில் உருவாக உள்ள தபாங்-3 படத்தில் நடிக்க இருக்கிறார்.
சமீபத்தில் ராம்சரண் - சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம் படத்தில் ஒரு பவர்புல் வில்லன் ரோலில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இந்தப்படம் தனக்கு முக்கியமானதாக அமைந்திருப்பதாக கூறியுள்ள ஜெகபதிபாபு, இதைப்போன்று மாறுபட்ட வேடங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன். ஒரே மாதிரியாக இல்லாமல், வித்தியாசமான கதைகளில் என்னை பயன்படுத்துங்கள் என்றும் இயக்குனர்களை ஒரு பேட்டி வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார் ஜெகபதிபாபு.