மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
சமந்தா- நாகசைதன்யா ஆகிய இருவரும் ஏ மாயா சேசனா, மனம், ஆட்டோ நகர் சூர்யா ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே காதல் உருவானது. அதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகும் சமந்தா நடிப்பை தொடர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் அவர், இரும்பு திரை, மகாநதி, யுடர்ன் கன்னட ரீமேக் என பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நாகசைதன்யா - சமந்தா ஆகிய இருவரும் தெலுங்கில் நின்னுகோரி படத்தை இயக்கிய சிவா நிர்வனா இயக்கும் படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். நாகசைதன்யா நடித்து வரும் ஷவ்யா சச்சி படப்பிடிப்பு முடிந்ததும் அவர் சமந்தாவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.