ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தொடர்ந்து இரண்டு சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துவிட்டு மூன்றாவது படத்தை ரிலீஸ் செய்ய காலதாமதம் ஆகிறது என்றால் அதில் அர்த்தம் உள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டாமா என வேதனையுடன் கேட்டுள்ளார் 'பூமரம்' படத்தை இயக்கிவரும் இயக்குனர் அப்ரிட் ஷைன். ஏற்கனவே நிவின்பாலியை வைத்து '1983', மற்றும் 'ஆக்சன் ஹீரோ பிஜூ' ஆகிய படங்களை இயக்கியவர் இவர்.
காளிதாஸ் ஜெயராம் மலையாளத்தில் அறிமுகமாகியுள்ள மற்றும் குஞ்சாக்கோ போபன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப்படம் 2017-லேயே வெளியாக வேண்டியது. இப்போது ஒரு வழியாக மார்ச் மாதம் வெளியாகிறது.
“கல்லூரி பின்னணியிலான இந்த கதையை திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் படமாக்க துவங்கியபோதே, இந்தப்படத்தை திட்டமிட்ட நேரத்திற்குள் ரிலீஸ் செய்ய முடியாது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் ரிலீஸ் தேதியை பற்றி கவலைப்படாமல் படத்தை இயக்கிவந்தேன்” என கூறியுள்ளார் அப்ரிட் ஷைன்.