ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
அனுஷ்கா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் பாகமதி. வழக்கமான ஹாரர் படம் என்கிற விமர்சனங்கள் வெளியானபோதும், வசூல்ரீதியாக இந்த படம் பெரிய சாதனை செய்திருக்கிறது. அதன்காரணமாக அனுஷ்காவின் ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்து மேலும் உயர்ந்து நிற்கிறது. அதனால், தொடர்ந்து கதையின் நாயகியாக நடிப்பதில் ஆர்வத்தை தீவிரப்படுத்தியுள்ளார் அனுஷ்கா.
இந்த நிலையில், அடுத்தபடியாக ஒரு படத்தில் நடிக்க அனுஷ்கா சைன் பண்ணி விட்டதாக டோலிவுட்டில் செய்திகள் பரவியுள்ளன. ஆனால் அனுஷ்கா அந்த செய்தியை மறுத்துள்ளார். அதேசமயம், பாகமதி ரிலீசுக்குப்பிறகு நிறைய கதைகள் கேட்டு வருகிறேன். இன்னும் கேட்கப்போகிறேன். அதன்பிறகு கேட்டதில் எனக்கு பிடித்த கதைகளை ஓகே செய்து நடிக்கப்போகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அடுத்தபடியாக சரித்திர கதையாக இல்லாமல் சமூக நோக்கமுள்ள ஒரு கதையில் நடிக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அனுஷ்கா.