ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்த 25வது படம் அஞ்ஞாதவாசி. இந்த படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், அனு இம்மானுவேல், குஷ்பு மற்றும் வெங்கடேசும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். அனிருத் இசையமைத்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் தடுமாறிப்போனார் பவன்கல்யாண்.
காரணம், இந்த படத்தின் வெற்றி தனது அரசியல் என்ட்ரிக்கு பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் படம் எதிர்பாராத தோல்வியை அடைந்ததால், அடுத்தபடியாக ஒரு ஹிட் படம் கொடுத்த பின்னர் ஜனசேனா கட்சியை வலுப்படுத்தும் வேலைகளில் ஈடுபடலாமா? இல்லை இப்போதே கட்சி பணிகளில் இறங்கி விடலாமா என்று குழம்பிப்போயிருக்கிறார்
இந்நிலையில், தனது அடுத்த படம் குறித்து கேட்டவர்களிடம் இன்னும் ஒரு மாதத்திற்கு பிறகு சொல்கிறேன் என்று தற்போதைக்கு அமைதி காத்து வருகிறார் பவன்கல்யாண்.