ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
நின்னுகோரி படத்தில் நானியுடனும், ஜெய்லவகுசாவில் ஜூனியர் என்டிஆருடனும் நடித்து வந்தபோது நிவேதா தாமஸை படங்களுக்கு புக் பண்ண சில இயக்குனர்கள் அணுகினர். ஆனால் அவரோ, இந்த படங்களில் நடித்து முடித்ததும் நான் ஒரு தேர்வு எழுத வேண்டியுள்ளது. அதனால் இந்த படங்களில் நடித்து முடித்த பிறகு நான்கு மாதங்களுக்கு எந்த படத்திலும் என்னால் ஒப்பந்தமாக முடியாது என்று சொல்லிக்கொண்டு படிப்பில் கவனத்தை திருப்பினார்.
இந்நிலையில், தற்போது தேர்வு எழுதி முடித்து விட்ட நிவேதா தாமஸ், நாக செளரியா நடிக்கும் புதிய படத்தில் கமிட்டாகியிருக்கிறார். சாய் ஸ்ரீராம் இயக்கும் இந்த படத்தில் ரொமான்டிக் நாயகியாக நடிக்கிறார் நிவேதா தாமஸ், இதன்பிறகு நடிப்பதற்கு மேலும் சில இயக்குனர்களிடமும் தற்போது கதை கேட்டு வருகிறார்.