ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, டாக்டர் ராஜ சேகர் ஆகிய இருவரும் சினிமாவில் நடித்து வந்தபோது போட்டியாளர்களாக இருந்தனர். அதன்பிறகு சிரஞ்சீவி அரசியல் கட்சி தொடங்கி போட்டியிட்டபோது அவருக்கு எதிராக டாக்டர் ராஜசேகரும் போட்டியிட்டார். இதனால் அவர்கள் எதிரும் புதிருமாக செயல்பட்டு வந்தனர்.
ஆனபோதும், தனது கருட வேகா படம் வெளியாவதற்கு முன்பு சிரஞ்சீவிக்கு படத்தை போட்டுக் காண்பித்தார் ராஜசேகர். அந்த படத்தை பார்த்த சிரஞ்சீவியும் படம் குறித்து பாசிட்டீவான கருத்துக்களை வெளியிட்டார். இது அந்த படத்தின் வெற்றிக்கு துணை புரிந்தது.
இந்த நிலையில், கடந்த புத்தாண்டு தினத்தின்போது ஐதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டலில் அரசியல்வாதி சுப்ரமணிய ரெட்டி தனது நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்தார். இந்த விருந்தில் சிரஞ்சீவி மட்டுமல்லாது டாக்டர் ராஜசேகர், மோகன்பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். இதன்மூலம் சிரஞ்சீவீ - ராஜசேகர் இடையேயான பகை மறைந்து மீண்டும் நண்பர்களாகி உள்ளனர்.