ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வந்த காமெடி நடிகர் விஜய் சாய். பொம்மரிலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்ட நிலையில் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகில் உள்ள யூசுப்டா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். கருத்து வேறுபாடால் தனது மனைவியை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு இவர் மீது இவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் விஜய் சாய் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இதுபற்றி தகவல் அறிந்ததும் யூசுப்குடா பகுதி போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். தனது தற்கொலைக்கான காரணத்தை விஜய் சாய் செல்போன் வீடியோவில் பேசியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை போலீசார் வெளியிடவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.