சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! |
குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகையான கல்பனா, கடந்த வருடம் ஜனவரி மாதம் திடீரென மரணம் அடைந்தார். கல்பனாவிற்கு ஒரே மகள் ஸ்ரீமயி. கல்பனாவிற்குப்பின் அவரது சித்தி ஊர்வசியும், பெரியம்மா கலாரஞ்சனியும் தான் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார்கள்.. இந்தநிலையில் தனது தாயைப்போலவே ஸ்ரீமயியும் சினிமாவில் நடிக்க வருகிறார் என ஒரு தகவல் அப்போதே கிளம்ப, அதை ஊர்வசி மறுத்து வந்தார்..
ஆனால் தற்போது ஸ்ரீமயி தனது பெயரை ஸ்ரீசங்க்யா என மாற்றிக்கொண்டு 'குஞ்சியம்மாவும் அஞ்சு பெண்களும்' என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இதுகுறித்து நேற்று நடைபெற்ற இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் கலந்துகொண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர் ஸ்ரீ சங்க்யாவும் அவரது பெரியம்மா கலாரஞ்சனியும். அறிமுக இயக்குனர் சுமேஷ் லால் இயக்கும் இந்த படத்தில் நடிகர்கள் கலாபவன் சாஜனும் டினி டாமும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.