ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த சில நாட்களுக்கு முன் மலையாள குணச்சித்திர நடிகரும் மிகச்சிறந்த மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுமான அபி என்பவர் காலமானார். அனைவரது அபிமானத்தையும் பெற்ற இவரது மறைவுக்கு மலையாள திரையுலகமே அஞ்சலி செலுத்தியது. இந்த சோக நிகழ்வு நடந்த சமயத்தில் நடிகர் திலீப் துபாயில் இருந்ததால் இறுதி நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியவில்லை.
பின் கேரளா திரும்பியதும் அபியின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய திலீப், அபியின் மகனும் தற்போது இளம் நடிகராக நடித்துவரும் நடிகருமான ஷேன் நிகமுக்கு தான் எப்போதும் துணை நிற்பேன் என ஆறுதல் கூறியுள்ளார்.
மறைந்த அபியும் திலீப்பும் சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பே நண்பர்கள் என்பதும், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுகளாக ஒன்றாக இணைந்து பயணித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.