ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஜீத்துவின் லைப் ஆப் ஜோஸுட்டி படத்தில் திலீப்புக்கு ஜோடியாகவும், ஞான் படத்தில் துல்கருக்கு ஜோடியாகவும் நடித்தவர் மலையாள நடிகை ஜோதிகிருஷ்ணா.
சமீபத்தில் தான் இவரது திருமணம் முடிந்துள்ள நிலையில் ஸ்ரீபத்ரா என்கிற போலியான பேஸ்புக் ஐடியில் இருந்து, ஜோதிகிருஷ்ணாவின் கணவர் உள்ளிட்ட புகுந்த வீட்டு நபர்களுக்கு, “இந்தப் பெண்ணை போய் திருமணம் செய்ய எப்படி முடிவெடுத்தீர்கள்” என்பது போன்ற சில அருவருப்பான மெசேஜ்கள் அனுப்பப்பட்டன.
இதைக்கண்டு ஜோதி கிருஷ்ணா அதிர்ச்சி அடைந்தாலும், தனது கணவர் உள்ளிட்ட புகுந்த வீட்டினர் தன் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், தனது திருமணத்திற்கு பின்னும் கூட இப்படி அவதூறு பரப்பும் அந்த ஆண்/பெண் தனது வேலையை இத்துடன் நிறுத்திக்கொள்ளட்டும் என்றும் கண்டித்துள்ளார்.
கடந்த வருடம் கூட இவர் ஆபாசமாக காட்சியளிப்பது போன்ற புகைப்படம் ஒன்று சோஷியல் மீடியாவில் பரவியதும் ஆனால் அப்போதும், இப்போதும் இதுகுறித்து அவர் போலீசில் ஏதும் புகார் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.