'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் |
1988ல் மலையாளத்தில் மம்முட்டி நடித்து வெளியான 'ஒரு சி.பி.ஐ டைரிக்குறிப்பு' படத்திற்கு கடந்த 29 வருடங்களில் இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளது. நான்கு பாகங்களிலும் சேதுராம ஐயர் என்ற சி.பி.ஐ அதிகாரி வேடத்தில் மிடுக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் மம்முட்டி. நீண்ட நாட்களாகவே இதன் 5ஆம் பாகம் உருவாக இருக்கிறது என சொல்லப்பட்டு வந்தாலும், அதற்கான அதிகாராப்பூர்வமான அறிவிப்பு எதையும் காணோம்.
இந்தநிலையில் இதன் உண்மை நிலை குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் முதல் நான்கு பாகங்களையும் இயக்கிய இயக்குனர் கே.மது. “இந்தப்படத்திற்கான கதை திரைக்கதை எல்லாம் பக்காவாக தயாராகிவிட்டது. மம்முட்டி பிசியாக இருப்பதால் உடனடியாக ஆரம்பிக்க இயலவில்லை. அவர் ஒகே சொன்னால் ஐந்தாம் பாகத்தின் படப்பிடிப்பு 2018ல் நிச்சயமாக ஆரம்பிக்கப்படும்” என கூறியுள்ளார் இயக்குனர் கே.மது.